.

.

27 Oct 2013

நோய் எதிர்ப்பு சக்தி

                                                                                                                                                                  
ஒரு சிலருக்கு அடிக்கடி ஒவ்வாமையால் தும்மல்,ஜலதோஷம்,சளி,இருமலை அவதிப்படுவர் அவர்களுக்கான பதிவு.





அடிக்கடி தும்மல் ஜலதோஷம் இருமல் காச்சல் உங்களை  வதைக்கிறதா இந்த பதிவை படிக்கவும்.  ஒவ்வாமையால் சிலருக்கு அடிகடி தும்மல்,சளி  தொடர்ந்து இருமல்  காய்ச்சல் ஏற்படும் அவர்கள் தினமும் ஒரு முழு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு இந்த சீதோஷன நிலை மாற்றத்தினால் ஏற்படும்  பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்                                 

  மேலும் உடல் பலவீனம் சோம்பல் உற்சாகமின்மை தூக்கமின்மை பசியின்மை அஜீரணம் செரியாமை போன்ற பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.                                   தினமும் ஒரு நெல்லிகாயை சாப்பிட பிடிக்காதவர்கள் அல்லது நேரம் இல்லாதவர்கள் புளிப்பு மற்றும் கசப்பு சுவை விரும்பாதவர்கள் நெல்லிக்காய் லேகியம் வாங்கி வீட்டில் வைத்து தினமும் காலை மாலை இருமுறை ஒன்றிரண்டு மேஜை கரண்டி (டீஸ் ஸ்பூன்)  சுவையாக சாப்பிடலாம் நெல்லிக்காய் லேகியம் இப்பொழுது அணைத்து ஆங்கில மற்றும் நாட்டு மருந்து கடைகளிலும் மலிவாக கிடைக்கிறது                                   ஆனால் நெல்லிக்காய் லேகியத்தை தரமான தயாரிப்பு கம்பெனியில் தெரிவு செய்ய வேண்டும் மேலும் இதற்க்கு எந்த பத்தியமும் கிடையாது. குழந்தைகள் முதல் தாத்தா பாட்டி வரை அனைவருக்கும் ஏற்றது 
                                   பித்த வாந்தி மற்றும் பயணங்களினால் ஏற்படும் வாந்தி மற்றும் உடற் சோர்வு போன்ற பல பிரச்சனைகளில் இருந்தும் தீர்வு அளிக்கும்.